Advertisment

ஊழியர்களுக்கு சைவ சாப்பாடு... ஷூட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்

நாடக நடிகராக இருந்து சினிமாவில் பல தடைகளை தாண்டி நாயகனாக மாறிய எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்

author-image
WebDesk
New Update
MGR

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு சைவ சாப்பாடு கொடுத்ததால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.

Advertisment

1967-ம் ஆண்டு எம்.ஏ.திருமகன் இயக்கத்தில் வெளியான மகராசி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமானர்கள் சங்கர் – கணேஷ். தொடர்ந்து அக்கா தங்கை, மாணவன், காலம் வெல்லும் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த இவர்கள், 1972-ம் ஆண்டு வெளியான நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் படத்திற்கு இசையமைத்தனர்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து ஆளுமையை செலுத்தியவர் எம்.ஜி.ஆர், நாடக நடிகராக இருந்து சினிமாவில் பல தடைகளை தாண்டி நாயகனாக மாறிய எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்று சொல்லலாம். நடிகர் நடிகைகள் இயக்குனர் மட்டுமல்லாமல, படப்பிடிப்பில் வேலை செய்யும் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் யாருக்காவது பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைப்பதில் முன்னணியில் இருக்கும் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு சைவ சாப்பாடு கொடுத்ததால் ஷூட்டிங்கை நிறுத்தியதாக இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார். க்ளாசிக் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் ஜி.என்.வேலுமணி. எம்.ஜி.ஆர் நடிப்பில் நான் ஏன் பிறந்தேன் என்ற படம் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.

இது குறித்து சங்கர் கணேஷ் கூறுகையில், எனக்கு ஜி.என்.வேலுமணி அவரின் பெண்னை திருமணம் செய்து வைத்தது எம்.ஜி.ஆர் தான். வெடி விபத்தில் எனது கால்கள் துண்டு துண்டாக ஆனபோதும், சுமார் ஒன்றவை வருடங்கள் என்னை மருத்துவமனையில் வைத்து பார்த்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அதேபோல் ஷூட்டிங்கில் ஏதாவது பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வந்து அந்த பிரச்சனையை சரி செய்வார்.

அப்படித்தான் ஒருநாள் சத்தியா ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. பிரேக் டைமில் எம்.ஜி.ஆர் ரவுண்டிங் வந்தார். அப்போது படப்பிடிப்பில் இருந்த ஊழியர்கள் அனைவருக்கும் சைவ சாப்பாடு கொடுக்கப்பட்டு அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்களை பார்த்த எம்.ஜி.ஆர் என்ன நினைத்தாதே தெரியவில்லை ஷூட்டிங் கேன்சல் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.

எம்.ஜி.ஆர் இப்படி செய்ததால் என்ன ஆனது என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு எங்கள் மாமனார் ஜி.என்.வேலுமணி உடனடியாக எம்.ஜி.ஆர் வீட்டுக்கு என்னையும் எனது மனைவியும் அனுப்பினார். நாங்கள் சென்று அவரிடம் கேட்டபோது, உடலை வருத்தி வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு போதுமான சாப்பாடு கறி மீனு என்று கொடுக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமாக வேலை செய்வார்கள். ஆனால் ஒருவர் தட்டிலும் அப்படி எதுவுமே இல்லை என்று சொன்னார்.

இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதனாலதான் அப்படி சைவ சாப்பாடு கொடுக்கப்பட்டது என்று சொல்ல, அப்படி இருந்தாலும் சிலர் மட்டும் தான் வெள்ளிக்கிழமை பார்ப்பார்கள். சாப்பாட்டில் அதெல்லாம் பாக்க கூடாது இது நம்ம குடும்ப விஷயம் அப்படி இருக்க கூடாது என்று சொன்னார். அதன்பிறகு நான் அவரிடம் சொல்கிறேன் என்று சொன்னவுடன் அடுத்த நாள் ஷூட்டிங் வந்தார் என்று சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment