முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழில், அமானுஷ்ய தொடர்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது கலர்ஸ் தமிழில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சீரியல் பிசாசினி. மிகவும் பிரபல இந்தி தொடரான பிசாசினி தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்த தொடர் ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து சுற்றி வருகிறது. அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதை கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்டு செயல்படுகிறாள். அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும்.
இந்தத் தொடரில் பிரமிக்க வைக்கும் காட்சிகள் பார்வையாளர்களை கவரும் விதமாக இடம் பெற்றுள்ளதாக இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காதல், பழிவாங்குதல் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டி என அனைத்தும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன. கற்பனை மிகுந்த அமானுஷ்ய உலகில் மறக்க முடியாத பயணத்துக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளும் விதமாக தொடர் அமைந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர், ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் நடித்துள்ளனர். இது குறித்து நைரா பானர்ஜி கூறுகையில், "கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிசாசினி தொடர் பார்வையாளர்களிடம் பெற இருக்கும் வரவேற்பை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இந்த தொடரின் கதை மற்றும் அது எடுக்கப்பட்ட விதம் ஆகியவை பார்வையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது. எனவே இந்த தொடர் சூப்பர் ஹிட்டாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“