கல்வியின் முக்கியத்துவம், மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழின் பொம்மி பி.ஏ.பி.எல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யமா அப்டேட்களை இதில் பார்க்கலாம்.
அனிருத்தும் பொம்மியும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர், ஆனால் அந்த நேரத்தில் சரஸ்வதிக்காக அனிருத் துளசி நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அனிருத் குழந்தை திருமணத்திற்கு ஏதிரானவர். சரஸ்வதியை மக்கள் திருமணம் செய்யும்படி வற்புறுத்துவதால், அந்த விஷயத்தை அனிருத் கையில் எடுக்க முடிவு செய்கிறார். இதனிடையே அனிருத் சமூகத்திற்கான கடமைகளுக்காக தனது அன்பை தியாகம் செய்தார்.
பொம்மி குடும்பமும் சுமதியும் கோபமாக இருப்பதால் கிருஷ்ணா நகரில் ஒரு கடினமான சூழல் உருவாகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையிலும், பொம்மி மற்றும் அனிருத் இருவரும் தங்கள் காதலில் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனிடையே வரவிருக்கும் எபிசோடில், துளசி நகருக்கும் கிருஷ்ணாநகருக்கும் இடையிலான விரோதத்தைத் தீர்க்க அனிருத்தும் பொம்மியும் மீண்டும் இணைவார்கள்.
விரைவில், மகிழ்ச்சியான நாட்கள் மீண்டும் வரும். குடும்பங்களுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்து, அனிருத்-பொம்மியின் பிரமாண்ட திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் முழு மனதுடன் தயாராகிறார்கள். அனிருத்தும் பொம்மியும் அழகான காதலில் வீழ்வதும், அதே நேரத்தில் குடும்பம் அவர்களின் உறவில் மகிழ்ச்சியடையும். பல நடனக் காட்சிகள் இருக்கும்.
திரிலோச்சந்திரன் (அனிருத்தின் பெரியப்பா) மற்றும் பொம்மியின் ஆச்சி இடையே ஒரு வேடிக்கையான காட்சியும் பார்க்கப்படும், அதில் அனிருத் தலையிட்டு நடனமாடுவார். ஆனால் திருமணம் நடக்காமல் இருக்க சந்திரஹாசன் என்ன செய்வார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், பொம்மியின் மீதான மோகம் அனிருத்தை மீண்டும் பொம்மியை திருமணம் செய்து கொள்வதை தடுக்க ஏதாவது செய்ய வைக்குமா? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“