ஆங்கிலத்தில் படிக்க....
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள அனிருத் ஜவான் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அட்லீ, பிகில் படத்திற்கு பிறகு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியிருந்தார். நயன்தாரா விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 7-ந் தேதி வெளியான ஜவான் படம் இதுவரை உலகளவில் 1043 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ள அனிருத், தனது சிறப்பான பின்னணி இசைக்காக பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார். ஜவான் படம் வெளியாகும் முன்பு அந்த படத்தின் நட்சத்திரங்கள் பலரும் பேட்டி கொடுத்தாலும் அனிருத் மட்டும் எவ்வித பேட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து விசாரித்தபோது அவர் 3 காரணங்களுக்காக பேட்டி கொடுக்க விரும்பவில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முதல் காரணம் படத்தின் இசை குறித்து தான் பேசாமல் படத்தில் தன்னுடைய இசை பேசப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்து ஒருமுறை பத்திரிக்கைகளில் வந்த தவறான செய்தி என்றும், அந்த செய்தி தான் திரைத்துறைக்கு வந்து 4 ஆண்டுகளில் முதல் வெளியான பெரிய அறிக்கை என்றும் அதனை கண்டு தான் அதிர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அடுத்து 3-வது காரணம் தான் தனி நபராக பேட்டி அளிக்க விரும்புவதால் ஜவான் பற்றி பேட்டி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது,
இதனிடையே பிலிம் கம்பானியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜவான் பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்ட அனிருத், விக்ரம், ஜெயிலர், ஜவான் என அடுத்தடுத்து பிரமாண்டமான படங்களை வைத்திருந்ததால் கடந்த இரண்டு வருடங்கள் பிஸியாக இருந்துவிட்டேன். வருடத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே இசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கோவிட் தொற்றுக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. அதற்கு மேல், ஜவான் படத்தில் பணியாற்றியது ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றுவது போல் இருந்தது.
"ஜவான் படத்தில், ஒரே நேரத்தில் நிறைய உணர்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. உதாரணமாக, ஷாருக் சார் வில்லனாக வரும் ரயில் காட்சி, சில நொடிகளில் ஒரு விவசாயியின் கதை இருக்கும். இந்த காட்சிகளை எப்படி இசையுடன் இணைக்கப் போகிறோம் என்பது எல்லாம் சவாலாக இருந்தது. எனவே, ஜவானில் எங்களின் பணி இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு தடையின்றி ஒலிக்கச் செய்ய சற்று கடினமாக இருந்தது. இதனால் தான் ஜவான் படத்தில் பணியாற்றுவது ஒரே நேரத்தில் இரண்டு முதல் மூன்று படங்களில் பணியாற்றுவது போன்றது.
ஜவானில் ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் விளக்கிய அனிருத், “பழங்குடியினர் பகுதியில் முதல் கதாபாத்திரம், வீரம் நிறைந்த பழங்குடியினரின் ஒலிகளை நாங்கள் தேர்வு செய்தோம். இதற்காக வகாண்டா மற்றும் அது போன்ற விஷயங்களை தேடினோம். அதன்பிறகு ஆசாத் கேரக்டருக்கு மாறியபோது, அவர் மிகவும் குளிர்ச்சியான பையன், நாங்கள் மெல்லிய இசையைப் பயன்படுத்தினோம். விக்ரம் ரத்தோர் கேரக்டருக்கு, அவர் அறிமுகமாகும்போது இயர்போன் அணிந்திருந்தார். இதற்காக இயக்குனரின் மனதில் இருந்த பழைய பள்ளி ராக்கை அவர் கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
ஆனால் படத்தில் அவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாங்கள் மீண்டும் பழங்குடியினரின் கோஷத்தையே பயன்படுத்த முடிவு செய்தோம். அதே பையன் நவீனமாகி திரும்பி வருவதால், முன்பு பயன்படுத்திய பழங்குடி இசையை இங்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அவர் ஹெட்போன் போட்டால் ராக் மியூசிக் கேட்பார் என்று, எங்கள் கல்லூரி நாட்களில் நாங்கள் செய்ததைப் போல நினைத்து செய்தோம். இவை அனைத்தும் படத்திற்கு எல்லாம் இயல்பாகவே அமைந்தது.
ஜவான் படத்தின் வெற்றியின் மூலம், அனிருத் அடுத்து இந்தியில் இன்னும் பல படங்கள் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார். அப்படி வாய்ப்பு வரும்பொது இரண்டு தமிழ் படம், ஒன்று இந்தி படம் என்பது தான் என் திட்டம் என்று கூறியுள்ளர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“