Advertisment

மசூதியில் இந்து முறைப்படி திருமணம்: ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்த 'தி கேரளா ஸ்டோரி' வீடியோ

இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் தயாராகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
New Update
ARRahman1

A R Rahman

இந்தியில் தயாராகியுள்ள தி கேரளா ஸ்டோரி படம் கேரளா மாநிலம் குறித்து பல சர்ச்சையாக கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  கேரளாவில் உள்ள மசூதியில் நடந்த இந்து திருமணம் குறித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த படம் நாளை (மே 5) வெளியாக உள்ளது. இந்த படத்தில் கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தில் டிரெய்லரில்,  கேரளாவில் ஆளும் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் "சுமார் 32,000 பெண்கள்" மாநிலத்தில் இருந்து காணாமல் போனதாகவும், அவர்கள் அனைவரும்இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், என்றும், உண்மையை தவறாக சித்தரிக்கின்றன என்றும் சிபிஐ(எம்) மற்றும் கேரளாவில் உள்ள காங்கிரஸும் கூறுகின்றன, அதே நேரத்தில் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா உட்பட படத்தின் தயாரிப்பாளர்கள் இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் உண்மை என்றும் கூறுகிறார்கள்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2020ல் கேரளாவில் உள்ள மசூதியில் நடந்த இந்து திருமணத்தைப் பற்றிய பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு, இந்து முறைப்படி நடத்தப்பட்ட அஞ்சு மற்றும் ஷரத்தின் திருமண விழாவைப் பற்றியது. ஒரு மசூதிக்குள் ஒரு இந்து பாதிரியார் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஒருவர், “இன்னொரு கேரளா ஸ்டோரி இங்கே உள்ளது” என்று ட்விட்டர் பகக்த்தில் பதிவிட்டுள்ளார். மத நல்லிணக்கத்திற்கான வெளிப்படையான அழைப்பில் ஏஆர் ரஹ்மான் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும், மனிதகுலத்திற்கான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் மாநிலத்தின் யதார்த்தத்தை "மொத்த மிகைப்படுத்தல்" மற்றும் "திரித்தல்" ஆகியவற்றில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், மே 5 (நாளை) வெளியாகும் இந்த சர்ச்சைக்குரிய இந்தி திரைப்படத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது ஒரு கற்பனைப் படைப்பு என்று உணர்த்தும் வகையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசரப் பட்டியலுக்காக இந்தப் படம் குறிப்பிடப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment