Advertisment

தமிழகத்தில் மாஸ் காட்டும் மஞ்ஜூமல் பாய்ஸ்... அமைதி காக்கும் இளையராஜா : நெட்டிசன்கள் ரியாக்ஷன்

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 96 படத்தின் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்து பேசிய இளையராஜா அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
Guna Ilayaraja Manjummel Boys

கமல்ஹாசன் - மஞ்ஜூமல் பாய்ஸ் - இளையராஜா

மலையாளத்தில் வெளியான மஞ்ஜூல் பாய்ஸ் திரைப்படம் தமிழில் வெளியான குணா படத்தை பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வழி செய்துள்ள நிலையில், இளையராஜா இந்த படம் குறித்து இதுவரை பேசாதது நெட்டிசன்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

Advertisment

1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான படம் குணா. கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கொடைக்கானலில் டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்படும் குகையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பின், டெவில்ஸ் கிச்சன் என்ற பெயர் குணா குகை என்று மாற்றப்பட்டது.

கொடைக்கானல் பகுதியில் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் இந்த குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட படம் தான் மஞ்ஜூமல் பாய்ஸ். கொச்சியில் இருந்து கொடைக்கானல் வரும் நண்பர்கள் குழுவினர் குணா குகையில் சுற்றி பார்க்கும்போது, அதில் ஒருவர் தவறி விழுந்துவிடுகிறார்

விழுந்தவர் இறந்திருப்பார் என்று அனைவரும் சொல்ல, அந்த நண்பர்கள் குழுவினர் விழுந்த நண்பனை காப்பாற்றியாக வேண்டும் என்று முயற்சி செய்து இறுதியில் அவர்களை காப்பாற்றுவார்கள். இந்த சம்பத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழகத்திலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக வருடங்கள் பல கடந்தாலும் குணா படத்தில் இடம்பெற்ற ‘’கண்மணி அன்போடு காதலன்’’ என்ற பாடல் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படத்தில், குகையில் விழுந்த நண்பரை க்ளைமேக்ஸில் தூக்கும்போது இந்த பாடல் ஒலிக்கும். இந்த படம் தமிழகத்தில் வெற்றியடைய இந்த பாடலும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல் குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி குணா படம் குறித்து தற்போது பல நேர்காணல்களில் பங்கேற்று பல தகவல்களை கூறி வருகிறார். அதேபோல் மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

அதே சமயம் இந்த படத்திற்கு இசையமைத்து, ‘’கண்மணி அன்போடு காதலன்’’ என்ற ட்ரெண்டிங் பாடலை கொடுத்த இளையராஜா இந்த படம் குறித்து இதுவரை எதுவும் பேசாத நிலையில், மஞ்ஜூமல் பாய்ஸ் படக்குழுவும் அவரை சந்தித்தாக எந்த தகவலும் இல்லை. தான் இசையமைத்த பாடல்கள் இப்போது வரும் படங்களில் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான விமர்சனங்களை கூறி வருபவர் தான் இளையராஜா. அதேபோல் தனது இசையமைப்பில் எஸ்.பி.பி பாடிய பாடல்களை, அவர் கச்சேரிகளில் பாடக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இளையராஜாவின் இந்த நடவடிக்கை நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியிருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 96 படத்தின் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்து பேசிய இளையராஜா அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், பலரும் இளையராஜா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

96 என்ற தமிழ் படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ஆண்மை இல்லாதவர்கள் என்று கூறிய இளையராஜா, தற்போது மஞ்ஜூமல் பாய்ஸ் என்ற மலையாள படத்தில் தனது பாடல்கள் பயன்படுத்தியுள்ளது குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறார். இளையராஜாவின் இந்த அமைதிக்கு என்ன காரணமாக இருக்கும் என்பதே தற்போது நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment