Advertisment

அனிருத் அறிமுகத்திற்கு அவர் தான் காரணம்... தனுஷ் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பு என பிஸியாக இருந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் சமீபத்தில் லால் சலாம் படம் வெளியானது.

author-image
WebDesk
New Update
Aishwarya Rajiniaktn

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

18 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2022-ம் ஆண்டு அவரை பிரிந்த அவர் சமீபத்திய பேட்டியில் தனது முன்னாள் கணவர் தனுஷ் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து இவருமே தங்களது தங்களது வேலைகளில் முழுமூச்சாக செயல்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது தங்களது மகன்களுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

இதில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பு என பிஸியாக இருந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் சமீபத்தில் லால் சலாம் படம் வெளியானது. இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தாலும், அவர்களது விவாகரத்துக்கான சட்டப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அது சமயம் தனது முன்னாள் கணவர் தனுஷ் குறித்து ஐஸ்வர்யா அதிகமாக பேசுவதில்லை. இதனிடையெ சமீபத்தில் தமிழ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது முன்னாள் கணவரைப் பற்றி பேசியுள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் எப்படி 'வை திஸ் கொலவெறி டி' மூலம் அறிமுகமானார் என்பது பற்றிய ஒரு சாதாரண உரையாடலில், தனுஷை பற்றி பேசினார். படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா தான் என்றாலும்,  அனிருத்தை இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை கிக்ஸ்டார்ட் செய்ததற்காக எல்லாப் புகழும் தனுஷுக்கே உரியது என்றும் தெரிவித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியதில் மகிழ்ச்சி. அவர் எனது உறவினர் என்றாலும், அவரது திறமைகளை தனுஷ் அங்கீகரித்தார். அனிருத்தின் பெற்றோர்கள் முதலில் அவர் சிங்கப்பூர் சென்று உயர்கல்வி படிக்க விரும்புவதாகவும், ஆனால் தனுஷ் தான் அனிருத்தின் பெற்றோரை சமாதானப்படுத்தி, இசையில் அவரைத் தொடர அனுமதிக்கும்படி அவர்களிடம் ஒப்புதல் வாங்கினார். தனுஷ் அனிருத்துக்கு ஒரு கீபோர்டை பரிசளித்ததாகவும், அதுவே '3' படத்தின் பாடல்களை இசையமைக்க அவரைத் தள்ளியதாகவும் அவர் தெரிவித்தார். அனிருத் ரவிச்சந்தர் சினிமாவுக்குள் வருவதற்கு தனுஷ் தான் காரணம் என்றாலும், அவரது கடின உழைப்பால் தான் இன்று உயரத்திற்கு வந்துள்ளார் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment