/indian-express-tamil/media/media_files/Nc1TxeYE9aLVwFAZDUfh.jpg)
ஷாருக்கான் - மணிரத்னம்
சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இயக்குனர் மணிரத்னம் – நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் 2 பாகங்களை இயக்கிய இவர், அடுத்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதேபோல் கடந்த வருடம் பதான், ஜவான்என பாலிவுட் சினிமாவில் 2 மெகாஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான டன்கீ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மணிரத்னம் - ஷாருக்கான் இவர்கள் இருவரும் இணைந்த உயிரே திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு உயிரே திரைப்படம் (இந்தியில் தில் சே) படம் வெளியானது. இதனிடையே டெல்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஷாருக்கானிடம், உயிரே படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் மணிரத்னத்துடன் எப்போது இணைவீர்கள் என்று ஷாருக்கானிடம் நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் மணிரத்னத்தை பார்த்து, ஒவ்வொரு முறை உங்களை சந்திக்கும்போதும், கேட்கும் ஒரு கேள்வியை இப்போது எல்லோர் முன்னிலையிலும் கேட்கிறேன். என்னோடு ஒரு படம் பண்ணுங்கள். இந்த முறை நீங்கள் தையா தையா என்று விமானத்தில் ஆட சொன்னால் கூட நான் தயாராக இருக்கிறேன் என்று ஷாருக்கான் சொல்ல, நீங்கள் விமானம் வாங்கும்போது அதை செய்கிறேன் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.
மணிரத்னத்தின் பதிவுக்கு, கருத்து தெரிவித்த ஷாருக்கான், என் படங்களின் வெற்றியை பார்க்கும்போது, விமானம் வாங்குவது வெகு தொலைவில் இல்லை மணி சார். விரைவில் வாங்குவேன் கவலைப்படாதீர்கள் என்று கூறியுள்ளார். இவர்களின் உரையாடல் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.