Advertisment

'என் சிறுநீரில் விளைந்த பப்பாளி பழம்..!' பா. ரஞ்சித் பேச்சால் சர்ச்சை

முன்னணி இயக்குனராக இருந்தாலும், அவ்வப்போது சர்ச்சையாக பேசி கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருபவர் தான் பா.ரஞ்சித்.

author-image
WebDesk
New Update
“மெர்சல் பட காட்சிகளை நீக்கத் தேவையில்லை” - இயக்குநர் பா.இரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் தலித் அரசியல் பேசும் படங்களை கொடுப்பதில் பெயர் பெற்றவர் பா.ரஞ்சித். 2012 –ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து கார்த்தி நடிப்பில் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் முன்னணி இயக்குனராக இவரை முன்நிறுத்தியது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் காலா, கபாலி என இரு வெற்றிப்படங்களை கொடுத்தார்.

Advertisment

இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திழ்ந்து வரும் பா.ரஞ்சித், அடுத்து ஆர்யா நடிப்பில் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கிய வருகிறார்

கே.ஜி.எஃப்-ல் நடந்த பழங்குடியினர் தமிழர்கள் மீதா தாக்குதல் குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ளது. முன்னணி இயக்குனராக இருந்தாலும், அவ்வப்போது சர்ச்சையாக பேசி கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருபவர் தான் பா.ரஞ்சித்.

அந்த வகையில் தற்போது இவர், புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், என் பக்கத்து வீட்டுக்காரர், எங்கள் வீ்ட்டுக்கு அருகில் இருக்கும் பப்பாளி மரத்தில் இருக்கும் பப்பாளி பழத்தை சாப்பிடுவார். அதில் இருக்கும் இலைகளை கூட சாப்பிடுவார். ஆனால் நாங்கள் எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்.

அந்த பப்பாளி மரத்தில் தான் நான் சிறுநீர் போயிருக்கேன் என் அண்ணன் மகள் மலம் கழித்திருக்கிறார். அதில் விளைந்த பழம் மற்றும் இலைகளை ருசித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் நாங்கள் கொடுத்தால் சாப்பிட மாட்டேன்கிறார்கள் என்று சிரித்துக்கொண்டே பேசியுள்ளார். ரஞ்சித்தின் இந்த பேச்சு சமூகவதைளங்களில் சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில், பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ராஜராஜ சோழன் ஆட்சிகாலத்தில் தங்களது நிலம் பறிக்கப்பட்டது என்றும், தங்கள் குல பெண்கள், விலை மாதுவாக மாற்றப்பட்டு மங்கள விலாஸ் என்ற இடத்தை உருவாகியதாகவும், கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது சிறுநீரில் வளர்ந்த பழம் என்று கூறி மீண்டும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment