நண்பர்கள் முன்னால வச்சு அவமானம்... விஜய்- நெப்போலியன் பிரிந்த பின்னணி இதுதானா?

விஜய் – நெப்போலியன் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

விஜய் – நெப்போலியன் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Vijay Napolen

விஜய் - நெப்போலியன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் பழம்பெரும் நடிகர் நெப்போலியன் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், இந்த மோதலின் பின்னணி குறித்து இயக்குனர் ராசி அழகப்பன் பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க உள்ளார்.

அதேபோல் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகி சீவலபெரி பாண்டி படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தவர் நெப்போலியன். தொடர்ந்து பல கிராமத்து கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நெப்போலியன் நடிகராக மட்டுமல்லாமல், அரசியல்வாதி, தொழிலதிபர் என பன்முக திறமை கொண்டவர் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் விஜய் – நெப்போலியன் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பிரபுதேவா இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நெப்போலியன் விஜய் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இருவரும் தற்போதுவரை பேசிக்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தான் விஜய் படத்தை பார்ப்பதே இல்லை என்று சமீபத்திய பேட்டியில் நெப்போலியன் வெளியாக தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இதனிடையே விஜய் நெப்போலியன் மோதல் குறித்து பேசியுள்ள இயக்குனர் ராசி அழகப்பன், போக்கிரி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் டிரஸ் மாற்றிக்கொண்டிருந்தபோது நெப்போலியன் தனக்கு தெரிந்த ஒரு நண்பருடன் கேரவனுக்கு சென்றுள்ளார். அப்போது இதை எதிர்பாராத விஜய் யாருயா அது நான்சென்ஸ் என்று பேசியுள்ளார். இதை கேட்ட நெப்போலியன் அப்படியே திரும்பி வந்துவிட்டார்.

ஆனால் விஜய் அவரை ஹேர்ட் பண்ண வேண்டும் என்று நினைத்து சொல்லவில்லை. உடை மாற்றிக்கொண்டே படப்பிடிப்பு குறித்து திங் பண்ணிக்கொண்டிருக்கும் ஒருவரை பார்க்க திடீரென சென்றால் யாராக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். ஆனால் விஜய் நெப்போலியனை குறி வைத்து இதை சொல்லவில்லை. இந்த நிகழ்வு விஜய் நெப்போலியன் இருவருக்குமே ஒரு பாடம்.

நாம் கேரவனில் இருக்கும்போது தகவல் கொடுக்காமல் ஒருவர் தன்னை பார்க்க வருகிறார் என்றால் அவர் நம் மீது எப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிறார் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் எவ்வளவுதான் ஒன்றாக பழகி இருந்தாலும் ஒருவரின் பிரைவேசி டைமில் திடீரென உள்ளே நுழைய கூடாது என்பதை நெப்போலியன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இயக்குனர் ராசி அழகப்பன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: