Advertisment

பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய நடிகர் விலகல் : அடுத்து வருவது யார்?

தற்போது இந்த சீரியலின் குணசேகரன் ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ethirneechal

எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய மாற்றம்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகியுள்ளார்.

Advertisment

சன் டி.வியின் கோலங்கள் சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இயக்குனர் திருச்செல்வம். தற்போது இவரது இயக்கத்தில் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் படைத்த ஒருவரால் அவரது குடும்பம் படும் கஷ்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் மெயின் வில்லன் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியலின் குணசேகரன் ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது இந்த சீரியலில் நடித்து வந்த முக்கிய நடிகர் ஒருவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஆதிரைக்கு ஜோடியும் எஸ்.கே.ஆரின் கடைசி தம்பி அருண் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மது கார்த்திக் விலகியுள்ளார்  

சீரியலில் அவரது கேரக்டருக்கு சரியான முக்கியத்துவம் இல்லாததால் அவர் இதில் இருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அருண் கேரக்டர் விலகியுள்ளதால் அடுத்து அந்த கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment