சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், கடந்த வாரம் பெரிய அளவில் பேசப்பட்ட ஜீவானந்தம் கேரக்டர் யார் என்பது குறித்து வெளியான தகவல் சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் திருச்செல்வம் எழுதி இயக்கி வரும் இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றம் குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
பல சூழ்ச்சிகளை செய்து ஆதிரையின் திருமணத்தை நிறுத்திய குணசேகரன் தற்போது அப்பத்தாவை காலை செய்ய திட்டம் தீட்டி வரும் நிலையில், அப்பத்தா ஜனனியிடம் ஜீவானந்தம் என்று ஒருவரை பற்றிய ரகசியத்தை கூறுகிறார். அப்பத்தா சொன்னதை வைத்து ஜனனி ஜீவானந்தத்தை தேடி வருகிறார். இதனிடையே தனது தங்கையை ஜான்சிராணியின் தங்கைக்கு திருமணம் முடிக்க திட்டம் தீட்டுகிறார் குணசேகரன்.
இந்த திருமத்திற்காக ஏற்பாடுகளை செய்து வரும் குணசேகரன், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமாளித்து வரும் நிலையில், பல நாட்களாக ஜீவானந்தத்தை தேடிவந்த ஜனனி ஒருவழியாக அவரை கண்டுபிடித்து குணசேகரனின் வீட்டுக்கு அழைத்து வருகிறார். ஜீவானந்தம் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இயக்குனர் திருச்செல்வம் தான் ஜீவானந்தமாக மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதனால் அடுத்து சீரியலில் என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோலங்கள் சீரியலில் தொல்காப்பியன் ரோலில் நடித்து பிரபலமான இயக்குனர் திருச்செல்வம், அதன்பிறகு தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.