/tamil-ie/media/media_files/uploads/2022/04/Kolangal-Serial.jpg)
Tamil Serial Re Telecast Update In tamil : தமிழ சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் பெற்றது சன்டிவி. 90-களின் பிற்பாதியில் சீரியல் ஒளிபரப்புவதில் முழுவீச்சில் களமிறங்கிய சன்டிவி தறபோது பல டிவி சேனல்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் ஓரம் கட்டி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
தற்போது சன்டிவியில் வித்தியாசமான பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒளிபரப்பான சீரியல்களுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய சாட்சி சித்தி சீரியல்.
கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 90-ஸ் கிட்ஸ்களின் பேவரெட் சீரியல் என்று சொல்லலாம். சமீபத்தில் கொரோனா ஊரடங்கின் போது இந்த சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலையில் சித்தி மறுஒளிபரப்பும், இரவில் சித்தி சீரியலின் 2-ம் பாகமும் ஒளிபரப்பானது.
இதில் 2-ம் பாகத்தை விட சித்தி மறு ஒளிபரப்புக்கே டிஆர்பி ரேட்டிங் அதிகம் கிடைத்தது. அந்த அளவிற்கு பழைய சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த வேளையில் மேலும் 2 புதிய சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சன்டிவியில் 2000-ம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் மற்றும் தென்றல் ஆகிய இரண்டு சீரியல்கள் தான் தற்போது மறு ஒளிபரப்புக்கு தயாராகி வருகிறது.
இதில் குறிப்பாக பிரபல நடிகை தேவையான நடித்த கோலங்கள் சீரியல் 2003- முதல் 2009- வரை சுமார் 1500-க்கு மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் தென்றல் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விகடன் நிறுவனம் தயாரித்திருந்த இந்த இரண்டு சீரியல்களும் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட் உள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்காசமாக இந்த சீரியல்களின் மறு ஒளிபரப்புக்காக காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.