பிக்பாஸ் நிகழச்சியின் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோவிகா விஜயகுமார் வெளிநாட்டில் இருந்து திரும்பிய தனது தாய் வனிதா விஜயகுமாரை ஏர்போட்டில் சந்தித்து உருக்கமாக கட்டி தழுவிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. முதற்காட்டமாக 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், 5 வாரங்கள் முடிவில் ஒரு சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். வழக்கம்போல் ஆரம்பம் முதலே கலவரபூமியாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனுக்கு விதை போட்டவர் ஜோவிகா விஜயகுமார் தான்.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே, ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் நின்றுவிட்டேன் என்று சொல்ல, யாராக இருந்தாலும் பேசிக் கல்வி அவசியம் என்று விசித்ரா சொல்ல, என்னை சொல்ல நீங்கள் யார் என்பது போல் ஜோவிகா அவரிடம் மோதலில் ஈடுபட்டார். இதனால் சமூகத்தில் படிப்பு அவசியமாக வேண்டாமா என்ற விவாதமோ ஏற்பட்டது. முதலில் தனியாக விளையாடிய ஜோவிகா ஒரு சில நாட்கள் கழித்து மாயா பூர்ணிமா கேங்கில் இணைந்தார்.
இதில் பிரதீப்புக்கு எதிராக உரிமை குரல் எழுப்பிய 3 பேரில் முக்கியமானவரான ஜோவிகா மீது பிக்பாஸ் வெளியில் மட்டுமல்லாமல் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவர் தன்னை விமர்சிக்கும் அனைவரிடமும் தான் செய்வது தான் சரி என்பது போல் அவர்களை கலாய்க்கும் வேலைகளிலேயே ஈடுபட்டிருந்தார். இதனிடையே கடந்த வாரட’ ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் செல்வற்கு முன் தான் இந்த வாரம் வெளியேறிவிடுவேன் என்று தனக்கு முன்பே தெரியும் என்று தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் கூறியிருந்தார் ஜோவிகா. மேலும் பிக்பாஸ் ரெட்கார்டு மற்றும் விமர்சனம் தொடர்பாக தன் முகத்தில் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா கூறியிருந்தததும், இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்ட புகைப்படமும் ஜோவிகாவுக்கு தெரியும் என்பதால் தான் அவர் நிகழ்ச்சியில் சோகமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.
இதனிடையோ ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது அவரது அம்மா வனிதா விஜயகுமார் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அவரை வரவேற்க ஏர்போர்ட் சென்றிருந்த ஜோவிகா விஜயகுமார் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவி அன்பை பொழிந்துள்ளார். அதேபோல் 2 மாத இடைவெளிக்கு பிறகு மகளை சந்தித்த வனிதாவும் முத்தம் கொடுத்து அவரை வரவேற்றார்.
இந்த வீடியோ பதிவை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், தாய் மகள் பாசத்தை பார்த்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“