/tamil-ie/media/media_files/uploads/2023/07/Arthana-Binu.jpg)
கடைக்குட்டி சிங்கம் நடிகை அர்த்தனா பினு
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலான நடிகை ஒருவர் தனது தந்தை சுவரில் ஏறி குதித்து தன்னையும் தனது குடும்பத்தையும் மிரட்டுவதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான தொண்டன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா பினு. தொடர்ந்து செம்ம, கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடிக்குழு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், தற்போது வாஸ்கோட காமா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
தந்தையை பிரிந்து தனது தாய் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வரும் அர்த்தனா பினுவுக்கு அவரது தந்தை வீட்டுக்கு வந்து மிரட்டுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் என் அம்மா தங்கை, ஆகியோர் என்னுடைய பாட்டி வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். என் அம்மாவும் அப்பாவும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று விட்டனர்.
ஆனால் என் தந்தை அத்துமீறி எங்கள் வீட்டில் நுழைந்து எங்களை மிரட்டி வருகிறார். கதவு பூட்டப்பட்டு இருந்தாலும் அவர் கதவை திறக்கச் சொல்லி என் தங்கையையும் பாட்டியையும் கொன்று விடுவதாக அவர் கூறுகிறார். நான் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் மிரட்டுகிறார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு வந்து படக்குழுவினர்களையே மோசமாக பேசுகிறார்.
இதனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தந்தை வீட்டின் சுவர் ஏறி குதித்து வரும் வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.