'அஞ்சு வண்ண பூவே'... தக் லைப் பாடலுக்கு என்ன அர்த்தம்? கவிஞர் கொடுத்த விளக்கம்!

தக் லைப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரில் வரும் 'அஞ்சு வண்ண பூவே' பாடலுக்கு கவிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

தக் லைப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரில் வரும் 'அஞ்சு வண்ண பூவே' பாடலுக்கு கவிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thug Life Kamal SOng

கமல்ஹாசன் – சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைப் திரைப்படத்தில் வரும் ‘அஞ்சு வண்ண பூவே’  கவிஞர் கார்த்தி நேதா விளக்கம் அளித்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், 37 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்துள்ள படம் தக் லைப். 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தெனாலி படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் 19-வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 5-ந் தேதி தக் லைப் படம் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்நாடகாவில், நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பேசியது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கன்னடம் தமிழில் இருந்து பிரிந்த மொழி என்று கமல்ஹாசன் சொல்ல, அதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை எழுப்பி தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தக் லைப் படத்திற்காக ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் பாடல் ஆசிரியர் பாடலுக்கான விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment
Advertisements

படத்தில் இடம்பெற்றுள்ள ‘அஞ்சு வண்ண பூவே’ பாடல் ஒரு உருவகம். ஒரு தாய் தனது மகன் அல்லது மகளை கொஞ்சுவது போன்ற ஒரு உருவகம் தான் இந்த பாடலின் வார்த்தை. நமது நாட்டுப்புற தாலாட்டு பாடல்களில் கேட்டிருப்போமே கண்ணே, கற்பகமே என்பது போல் அஞ்சு வண்ண பூவே என்பது ஒரு கொஞ்சல் வார்த்தை. ‘அஞ்சு வண்ண பூவே’ என்றால் அது பூ அல்ல ஒரு உருவகம் என்று கூறியுள்ளார் அந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் கார்த்தி நேதா.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: