தமிழக ஏழை குழந்தைகளுக்கு உதவிய மலையாள நடிகர் : குவியும் பாராட்டுக்கள்

பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில தகுந்த அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்த கோவையை சேர்ந்த மலையாள நடிகர் பிரதீப் ஜோஸ் அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்துள்ளார்.

பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில தகுந்த அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்த கோவையை சேர்ந்த மலையாள நடிகர் பிரதீப் ஜோஸ் அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

கோயம்புத்தூர்

ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் செவித்திறனை வழங்கி நெகழ்ச்சியை ஏற்படுத்திய மலையாள நடிகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisment

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளிளே பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில தகுந்த அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்த கோவையை சேர்ந்த மலையாள நடிகர் பிரதீப் ஜோஸ் அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் காமராஜரின் 121"வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் செவித்திறன் கருவி, உதவித்தொகையை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மலையாள நடிகரான இவரது இந்த செயல் கோவை மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: