கேப்டனுக்கு மனைவி, வீரபத்ரன் கடத்திய காயத்ரி; நடிகை ரூபினி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

மன்சூர் அலிகான், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நடிகர்கள் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், விஜயகாந்த் மனைவியாக நடித்த ரூபினி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.

மன்சூர் அலிகான், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நடிகர்கள் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், விஜயகாந்த் மனைவியாக நடித்த ரூபினி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
captain prabharan movie

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கந்த 1991-ம் ஆண்டு வெளியான அவரின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நடிகை ரூபினி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? அவரின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சினிமா பின்புலம இல்லாமல் சினிமாவில் சாதித்த முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இவர், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு இயக்குனராகும் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், அரசியலிலும் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர். சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் 100-வது படம் வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்துக்கு 100-வது படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான் விஜயகாந்தின் 100-வது திரைப்படம். சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபனி, காந்திமதி, நம்பியார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது படம் வெளியாகி 34 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 25 விஜயகாந்த் பிறந்த நாளை முன்னி்ட்டு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் (ஆகஸ்ட் 22) இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் புதுப்படம் ரிலீஸ் ஆனது போன்று ரசித்து பார்க்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்த மன்சூர் அலிகான், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நடிகர்கள் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் படத்தில் விஜயகாந்த் மனைவியாக நடித்த ரூபினி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. மும்பையை சேர்ந்த ரூபினி 1987-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரஜினியுடன் மனிதன்,  ராஜா சின்ன ரோஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார்,

Advertisment
Advertisements

Actress rubini

மேலும், ராமராஜன், சத்யராஜ், பிரபு ஆகியோருடனும் நடித்திருந்த ரூபினி, ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன்விசாரணை படத்திலும், அவரின் 2-வது படமான கேப்டன் பிரபாகரன் படத்திலும் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். 7 ஆண்டுகளில், 30-க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரூபினி கடைசியாக 1994-ம் ஆண்டு தாமரை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறக நடிக்காத இவர், 2020-ம் ஆண்டு 26 வருட இடைவெளிக்கு பிறக சித்தி 2 சீரியலில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

தனது வசீகர புன்னகையால் பலரின் இதயங்களை கவர்ந்த நடிகை ரூபினி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்றால், மும்பையில் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: