Advertisment

கதாநாயகிக்கு துணி துவைத்துக் கொடுத்த இயக்குனர்... யாரப்பா அந்த நடிகை?!

நான் நாயகி உடையை துவைத்துக் கொண்டிருந்தேன், என் உதவி இயக்குநர் அதை படம் எடுத்து என் மனைவிக்கு அனுப்பிவிட்டார்.

author-image
WebDesk
New Update
கதாநாயகிக்கு துணி துவைத்துக் கொடுத்த இயக்குனர்... யாரப்பா அந்த நடிகை?!

ஒரு படத்தின் இயக்குனர் நாயகியின் ஆடைகளை துவைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பொத்தானூர் தபால் நிலையம். கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாகவும் நடிததிருந்தார். பிரவீன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில உள்ள பொத்தானூர் தபால் நிலையத்தில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. பொத்தானூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருக்கும் நாயகனின் அப்பா, தபால் நிலையத்திற்கு சொந்தமான 6 லட்சம் பணத்தை பாதுக்காப்பிற்காக தனது வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்

அப்போது வழியில் சில மர்மநபர்கள் அந்தபணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுகின்றனர். அன்று வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு முடிந்து திங்கள் கிழமை பணத்தை தபால் நிலையத்தில் வைக்க வேண்டும். இந்த இடைப்பட்ட 2 நாட்களில் தனது அப்பா தொலைத்த பணத்தை நாயகன் தனது காதலி மற்றும் நண்பனின் உதவியுடன் எப்படி மீட்டார் என்பது தான் இந்த படத்தின் கதை.

லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகளை படத்தின் இயக்குநர் பிரவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், பிளாக் மேஜிக் என்ற ஒரு சிறிய கேமராவை வைத்துதான் இந்த படத்தை எடுத்தாக கூறியிருந்தனர்.

இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள மற்றொரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத்தில் இயக்ககுனர் பிரவின் துணி துவைத்துக்கொண்டிருக்கிறார். இந்த பதிவில், படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திர ஆடைகளையும் நான்தான் துவைத்தேன். இதற்காக வாஷிங் மிஷின் பயன்படுத்தப்படவில்லை.

ஏனென்றால் எங்களிடம் ஒரே ஒரு செட் மட்டுமே உள்ளது, இது பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட வேண்டும். நான் நாயகி உடையை துவைத்துக் கொண்டிருந்தேன், என் உதவி இயக்குநர் அதை படம் எடுத்து என் மனைவிக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  இதை பார்க்கும் பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment