Advertisment

பாடலை நீக்குங்கள், இழப்பீடு வேண்டும் : மஞ்ஜூமல் பாய்ஸ் படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற மஞ்ஜூமல் பாய்ஸ் படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Manjummel Boys

மஞ்ஜூமல் பாய்ஸ் - இளையராஜா

ரஜினிகாந்தின் கூலி படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பிய இசையமைப்பாளர் இளையராஜா தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisment

கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான இநத படம்கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.

கொடைக்கானல் குணா குகையில் தவறி விழுந்த தனது நண்பன் ஒருவனை காப்பாற்ற நண்பர்கள் குழுவினர் எடுக்கும் முயற்சி தான் இந்த படம். இந்த படத்தின் இறுதிக்காட்சியில் குகையில் விழுந்த நண்பனை மேலே தூக்கிக்கொண்டு வரும்போது, குணா படத்தில் வரும் ‘’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’’ என்ற பாடல் வரிகள் ஒலிக்கும். இந்த படத்தில் வெற்றிக்கு சரியான இடத்தில் இந்த பாடலை சேர்த்த்தும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்ல்லாம்.

கேரளாவில் வெளியான இந்த படம் தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் வெளியான புதிதில், பட குழுவினர் குணா படத்தின் நாயகன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருந்த நிலையில், அடுத்து நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது பாடல் எந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கு எதிரான நோட்டீஸ் விடும் இசையமைப்பாளர் இளையராஜா, மஞ்ஜூமல் பாய்ஸ் படம் குறித்து கண்டுகொள்ளவில்லை என்று ரசிகர்கள் கூறியிருந்த நிலையில், தற்போது இளையராஜா நடவடிக்கை எடுத்துள்ளார். மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற தனது பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.

இது குறித்து அனுப்பட்டுள்ள நோட்டீஸில், பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜாவுக்கு இந்த பாடலின் முழு உரிமை உள்ளது. அவரிடம் அனுமதி பெற்று விட்டு இந்த பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இல்லை என்றால் பதிப்புரிமையை ஏற்கனவே மீறியதாக, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ilayaraja Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment