/indian-express-tamil/media/media_files/2024/11/04/rDCp3YEoYMSQtkUyzZan.jpg)
தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். சமீப காலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான அமரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாரி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம், முழுக்க முழுக்க காஷ்மீரில் ராணுவ பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ந் தேதி வெளியான அமரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது அமரன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பின்னணி கொண்ட அமரன் படத்தின், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திரித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று, இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அமரன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மிட்டல்கள் வந்தால், அமரன் படம் ஓடும் திரையரங்குகளுக்கு தொடர் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னை, விருகம்பாக்கம், அண்ணா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.