விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் சீரியல் ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சி இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை சீரியல்கள் ஒளிபரப்புவதில் இரு சேனல்களுக்கு இடையே கடும்போட்டி ஏற்படுகிறது. இதில் இந்த 2 சேனல்களிலுமே ஒரு சீரியல் முடிந்தால் விரைவில் அடுத்த சீரியல் ஒளிபரப்பாகும். அந்த வகையில் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் கிழக்கு வாசல். இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த சீரியலின் ப்ரமோவில், “எஸ்.ஏ.சந்திரசேகர் தம்பதியினருக்கு 60-வது கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதன்பிறகு அனைவரும் பெற்றோருக்கு பாத பூஜை செய்ய, ரேஷ்மாவை பாதபூஜை செய்ய சொல்லி அழைக்கிறார்கள். இதற்காக செல்லும் அவரை ஆனந்தபாபு தடுக்கிறார்.தொடர்ந்து இவள் எப்படி முறை செய்ய முடியும். பெத்த பிள்ளைங்க தான் பாத பூஜை செய்ய முடியும் என சொல்கிறார்.
அடுத்து ஆனந்த் பாபு சொல்ல, ரேஷ்மா "என்ன மாமா?" என கேட்கிறார். ஆனால் ”அவரோ யாருக்கு யார் மாமா?, இங்கே இருப்பவர்கள் எல்லாம் உன் அண்ணன் மாதிரி, உன்னுடைய அப்பா அம்மாவும் மாதிரி தான். தத்தெடுத்த பிள்ளையை உரிமை கொண்டாட விட்டால் அது சொத்தில் பங்கு கேட்கும். நீ இந்த வீட்டு பொண்ணு இல்ல, பொண்ணு மாதிரி தான்” என சொல்லி ரேஷ்மாவை சங்கடப் படுத்துகிறார்.
இதனைக் கேட்டு கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர், "ஆமா அவ பொண்ணு இல்ல இந்த வீட்டோட சாமி. இந்த சாமியப்பன் இருக்கிற வரைக்கும் இந்த வீட்டோட கற்பகிரகத்துல அவ தான் சாமி" என சொல்லி ரேஷ்மாவை பெருமை கொள்ள செய்கிறார். அத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இது கிழக்கு வாசல் சீரியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.