நாயகியாக வைஷ்ணவி... முக்கிய கேரக்டரில் சுப்பு சூரியன் : ஜீ தமிழின் புதிய சீரியல் ப்ரமோ வைரல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிகை வைஷ்ணவி மீண்டும் நாயகியாக களமிறங்குகிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிகை வைஷ்ணவி மீண்டும் நாயகியாக களமிறங்குகிறார்.

author-image
WebDesk
New Update
Vaishnavi

நடிகை வைஷ்ணவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்ட நிலையில், இந்த வரிசையில் தற்போது வீரா என்ற புதிய சீரியல் வெளியாக உள்ளது.

Advertisment

சினிமாவை விட சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நாள்தோறும் புதிய சீரியல்கள் குறித்த அப்டேட்கள் வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது வீரா என்ற புது சீரயில் அறிவிப்பு வெளியாகி அதன் ப்ரமோவும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா, கார்த்திகை தீபம் உட்பட முக்கிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த சீரியலில், 4 தங்கைகளுக்கு சகோதரனான ஒருவர் திடீரென மரணமடைந்துவிட, நாயகி அந்த குடுபத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் என்பது தான் இந்த சீரியலின் கதை என்று ப்ரமோ மூலம் தெரியவந்துள்ளது. இதில் நாயகியாக நடிகை வைஷ்ணவி அருள்மொழி நடிக்க நாயகனாக அருண் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் பசங்க சிவக்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த சீரியலில், ரோஜா சீரியல் புகழ் சுப்பு சூரியன், 4 தங்கைகளுக்கு அண்ணனாக நடித்துள்ளார். லட்சுமி, சுபிக்ஷா, பாலாஜி, சித்தார்த் மற்றும் நவீன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வீரா சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: