New Update
/indian-express-tamil/media/media_files/a2vK1moOHGhpPx3QSiSb.jpg)
சித்து ஸ்ரேயா
சித்து ஸ்ரேயா
சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சித்து – ஸ்ரேயா அச்சன் ஆகியோர் திருமணம் சீரியல் மூலம் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானவர் சித்து. அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஸ்ரேயா அச்சன். இந்த சீரியலில் இருவரும் சிறப்பாக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், சீரியலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தனர். இந்த சீரியலில் நடிக்கும்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தொடர்ந்து சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வர வர இவர்களின் காதலும் வளர்ந்து வந்த நிலையில், சீரியல் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. திருமணத்திற்கு பின், சித்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்திருந்தார். அதேபோல் ஸ்ரேயா அச்சன் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்தார்.
இதனிடையே தற்போது சித்து – ஸ்ரேயா இருவரும் மீண்டும் ஒரு சீரியலில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வள்ளியின் வேலன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சின்னத்திரை ரசிகர்கள், பலதரப்பட்ட மற்றும் ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால், 'வள்ளியின் வேலன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அப்பட்டமாக உள்ளது.
'பாக்கியலட்சுமி' மற்றும் 'சிறகடிக்க ஆசை' போன்ற ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வரும், விஜய் டிவி ஒரு முக்கிய பொழுதுபோக்கு சேனலாக வலம் வரும் நிலையில், இந்த புதிய சீரியல் அதன் புதிரான கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களுடன் பார்வையாளர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.