சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன்,இயக்குனர் தயாரிப்பாளர்,கதாசிரியர்,உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.
Advertisment
அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. அதேபோல் க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.
அதேபோல் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்காக கையில் மாற்றங்கள் செய்வதும், கேரக்டர்களின் பெயர்களை மாற்றுவதும் நடந்துள்ளது. 1967-ம் ஜெய்சங்கர் கே.ஆர் விஜயா நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பட்டிணத்தில் பூதம். குழந்தைகளுக்கு பிடித்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நாயகி கே.ஆர்.விஜயா ஜெய்சங்கர் வருகைக்காக காத்திருந்து பாடுவது போல் ஒரு பாடல் அமைந்திருக்கும்.
இந்த சுட்சிவேஷனை கேட்டுக்கொண்ட கண்ணதாசன் ‘’அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’’ என்ற பாடலை எழுதியிருப்பார். இந்த பாடல் படக்குழு அனைவருக்கும் பிடித்துவிட்டது. அந்த நேரத்தில் தனது தமிழ் தேசிய கட்சியை காமராஜரின் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கண்ணதாசன் முடிவு செய்திருந்தார். ஆனால் இவர் திராவிடம் பேசுவார் என்பதால், காங்கிரஸ் கட்சியில் இவர் வருகை பலருக்கும் பிடிககவில்லை.
Advertisment
Advertisements
இதை காமராஜருக்கு தெரிவிக்கும் விதமாக காமராஜரின் அம்மா சிவகாமி பெயரை பயன்படுத்தி இந்த பாடலை எழுதியிருப்பார். ஆனால் படத்தின் கதைப்படி ஜெய்சங்கருக்கு அம்மா கிடைகாது. நண்பர்கள் மட்டும் தான். அதனால் படக்குழு இதற்கு என்ன பண்ணலாம், பாடலில் சிவகாமியை மாற்றி தர சொல்லலாமா என்று யோசித்துள்ளனர். புதிதாக ஒரு கேரக்டரை உருவாக்கினால், பூதம் – ஜெய்சங்கர் இடையே நடக்கும் கதை என்பதால் அந்த கேரக்டர் தேவை இல்லாதது.
இதனால் கண்ணதாசனிடம் இந்த சூழ்நிலையை விளக்கி சொல்ல, அவர் படத்தில் ஒரு காட்சி அதிகமாக வையுங்கள். ஒரு பெண் படத்தை மாட்டி அவர் தான் ஜெய்சங்கரின் அம்மா சிவகாமி என்று முதலில் தெரியபடுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதை ஒப்புக்கொண்ட படக்குழு படத்தின் தொடங்கத்திலேயே இதே போன்ற ஒரு காட்சியை வைத்து, அம்மா சிவகாமிக்கு நீ மட்டும் அல்ல நானும் ஒரு மகன் தான் என்று நாகேஷ் பேசியிருப்பார்.
கண்ணதாசன் எழுதிய பாடலை விட மனமில்லாமல் படத்தின் கதையிலேயே படக்குழு மாற்றத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“