Advertisment

எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத ஏங்கிய வைரமுத்து: இறுதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினாரா?

1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

author-image
WebDesk
New Update
MGR Vairamuthu

தான் கவிஞராக அறிமுகமானபோது எம்.ஜி.ஆர் திரைத்துறையில் இல்லை என்றாலும், அவருக்கு ஒரு பாடல் எழுத வேண்டும் என்று ஏக்கத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து, ஒரு சோகமான காலக்கட்டத்தில் இந்த ஏக்கத்தை தீர்த்துக்கொண்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர்,  1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.

அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படம் புன்னகை மன்னன் தான் என்றாலும், இவர்கள் கூட்டணியில் வெளியான கடைசி பாடல், சிறைப் பறவை படத்தில் இடம் பெற்றுள்ளது.

புன்னகை மன்னன் படத்திற்கு, இளையராஜா வைரமுத்து இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், அடுத்து இருவரும் தனித்தனியாக தங்களது வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதில் வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள நிலையில், கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த வைரமுத்து அடிப்படையில ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். ஆனால் இவர் பாடல் ஆசிரியராக அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து விலகிய காலம்.

இதன் காரணமாக எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத முடியவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 1977-ல் முதல்வராக அமர்ந்த எம்.ஜி.ஆர் 1987-ல் மரணமடைந்தார். அப்போது எம்.ஜி.ஆருக்கான ஒரு ஆல்பம் தயாரிக்க முடிவு செய்த ஏ.வி.எம்.நிறுவனம் சங்கர் கணேஷ் இசையில் வைரமுத்துவிடம் பாடல் எழுத கேட்டுள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு ஒரு சில பாடல்களை எம்.ஜி.ஆருக்கான எழுதியுள்ளார் வைரமுத்து.

அந்த வகையில் வெளியான ஒரு பாடல் தான் ‘’சந்தன பேழையே சந்தன பேழையே எத்தனை தவங்கள் செய்தாயோ’’ என்ற பாடல். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பாடிய இந்த பாடல் பல இடங்களில் அவரின் அழுகுரல் ஒலிப்பதை கேட்க முடியும். எம்.ஜி,ஆருக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த வைரமுத்து இந்த ஏக்கத்தை அவரின் மறைவுக்கு பின் தீர்த்துக்கொண்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr Kavignar Vairamuthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment