4 மணி நேர படம், நான் 10 ஆயிரம் முறை கேட்ட பாடல்: இப்போ 3 மணி நேரம் கூட இல்ல: வைகோ சொன்ன எம்.ஜி.ஆர் படம்!

வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார்.

வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார்.

author-image
WebDesk
New Update
MGR Nadodi mannan

எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி, தயாரித்து நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் மொத்தம் 4 மணி நேரம் எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது 3 மணி நேரம் கூட இல்லை. அந்த 4 மணி நேர படத்தை நான் தேடிக்கொண்டு இருக்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்து 3-முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், அரசியலில் தடம்பதித்து முதல்வராக அமர்ந்தார். முதல்வராக இருந்தாலும், நடிப்பின் மீது இருந்த தீராத காதலால், மீண்டும் ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆர் முயற்சித்தார். ஆனால் அரசியல் காரணங்களால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனிடையே எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு இன்றவரை மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இந்த படம் இடைவேளைக்கு முன்பு வரை கறுப்பு வெள்ளை படமாகவும், இடைவேளைக்கு பிறகு, கலர் படமாகவும் இருக்கும். பானுமதி நாயகியாக நடித்த இந்த படத்தின் மூலம் தான் சரோஜா தேவி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்ற கூறப்படுகிறது. எம்.ஜி.ஆரின திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக இருக்கும் நாடோடி மன்னன் திரைப்படம் முதலில் 4 மணி நேரம் எடுக்கப்பட்டதாக வைகோ கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து ஒரு வீடியோவில், அந்த படத்தில் வேட்டை மண்டபத்தில் நடைபெறும் அவருடைய வாள்ச்சண்டையே தான் ரசிப்பேன். மொத்தம் நான்கு மணி நேரம் தயாரித்த படம். இப்போது மூன்று மணி நேரமும் கூட ஓடவில்லை. நான்கு மணி நேரம் ஓரிஜினல் எனக்கு அப்படியே கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று நான் வாசுவிடம் கேட்கிறேன்.ஏனென்றால் நான் ஒரு கலாரசிகன். அந்த வேட்டைய மண்டபத்து சண்டையைச் சின்னப்பிள்ளையில் 59-ல பார்த்திருக்கிறேன். அற்புதமான சண்டைக்காட்சி.அதற்கு பிறகு பாதியை கழித்துவிட்டார்கள்.

அதுபோல நான் ஒரு 5000 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். என் நடையின் களைப்பையை போக்குகிற பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கு. முன்னாடி போற வேனில் மைக்க்செட் போடுவாங்க. அதில் அதிகமாக கேட்ட ஒரு பத்தாயிரம் முறைக்க மேல் கேட்ட பாடல் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா. அந்த பாடலை கேட்டும் போது எனக்கு அது சோர்வு போயிடும். எஸ்.எம். சுபாயா நாய்டு அதற்கு இசையமைத்தார். லட்சுமணதாஸ் அந்தப் பாடலை எழுதினார். ஈவதிலும் கூட மகிழ்ச்சி இல்லையென்று எழுதினார். இதுவரைக்கும் சங்க இலக்கியத்தில் இல்லாத ஒரு கருத்து அதில் மையம் கொண்டிருக்கிறது என்ற வைகோ கூறியுள்ளார்.

Tamil Cinema News Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: