/indian-express-tamil/media/media_files/rIU854I0WhJmMtXEs0JG.jpg)
பொதிகையின் புதிய சீரியல் பட்ஜெட் குடும்பம்
இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள டிவி சீரியல்களை ஒளிபரப்புவதற்கு தனியார் சேனல்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பு வாரத்தின் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களிலும் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு சேனல்களும் புதிய சீரியல்களை களமிறங்கி வரும் நிலையில், பழைய சீரியல்களின் திரைக்கதையிலும் மாற்றங்களை கொடுத்து மக்கள் ரசிக்கும் வகையில் மாற்றி வருகின்றனர். சன்டிவி விஜய் டிவி ஜீ தமிழ் ஆகிய 3 சேனல்களும் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிதாக பொதிகையும் இணைந்துள்ளது.
முதன் முதலாக அரசாங்கத்தின் மூலம் தொடங்கப்பட்ட பொதிகை சேனல் தற்போது சீரியல்களை ஒளிபரப்ப தயாராகி வருகிறது. ஏற்கனவே ராதிகா சரத்குமார் நடிப்பில், தாயம்மா என்ற சீரியல் ஒளிபரப்பாக இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக அந்த சீரியல் வேறு சேனலுக்கு மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்போது பொதிகையில் பட்ஜெட் குடும்பம் என்ற புதிய சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த சீரியலில் குறிச்சி நாதன் நாயகனாகவும், நாயகி சீரியலில் வில்லியாக நடித்த நடிகை சுஷ்மா நாயர் நாயகியாகவும் நடிக்க உள்ளனர். இந்த சீரியலின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.