/tamil-ie/media/media_files/uploads/2021/06/Bigboos.jpg)
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2-ல் வெற்றி பெற்ற கனி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் அதிக பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பை தொடர்நது கடந்த ஆண்டு இறுதியில் இந்நிகழ்ச்சியில் 2-வது சீசன் தொடங்கியது. சமையலுடன் இணைந்த காமெடி ஷோவான இதில் கோமாளிகளாக வரும் பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.
இதில் முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த சீசன் 2-வில் இயக்குநர் அகத்தியனின் மகள் கனி சாம்பியன் பட்டம் வென்றார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவித்த நிலையில், குக் வித் கோமாளியை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இம்மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வரும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு எப்போது நடைபெறும் என்று இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற கனி தற்போது பிக் பாஸ் வரப்போகிறார் என செய்தி பரவி வந்தது.
இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை என்றாலும், இது குறித்து கனி தனது வீடியோவில் ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது பின்பாஸ் 5 வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் 'பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துகொள்வது குறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை என்றும், இந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் அப்போது பார்ப்போம் என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.