பிக்பாஸில் நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து வெளியேற்றம்? ரசிகர்கள் சோகம்
இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே ஸ்கோர் செய்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து. அவரிடம் சண்டை போட்டு பிரபலமானவர் மற்றொரு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி.
இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே ஸ்கோர் செய்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து. அவரிடம் சண்டை போட்டு பிரபலமானவர் மற்றொரு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து டிக்டாக் பிரபலம ஜி.பி.முத்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
விஜய் டிவயின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன கடந்த அக் 9-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக அதிக புதுமுகங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே ஸ்கோர் செய்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து.
அவரிடம் சண்டை போட்டு பிரபலமானவர் மற்றொரு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி. அதேபோல் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முதல் நாளில் இருந்தே மோதல் தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. நெட்டிசன்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம்.
மேலும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜி.பி.முத்து தனக்கு ஆதரவான ஆர்மியை தொடங்கிவிட்டார். அடுத்து இலங்கையை சேர்ந்த போட்டியாளருக்கு முதல் நாளிலேயே ஆர்மி தொடங்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முன்பு விஜய் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போ டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் 2 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் நெட்டிசன்கள் அவ்வப்போது தகவல்களை பரப்பி வருகினறனர்.
இதனிடையே கடந்த சில தினங்களாக ஜி.பி.முத்து தனது குடும்பத்தின் நினைவாக இருக்கிறது என்றும் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவரை சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினாலும், தன்னால் சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை என்று கூறி வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
இப்படி ஒரு நிலையில், தற்போது ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கண்பேஷன் ரூமில் பிக்பாஸிடம் ஜி.பி.முத்து பேசினார். அப்போது நீங்கள் வெளியேற விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு அவர் ஆமாம் என்று சொல்கிறார் அதனைத் தொடர்ந்து நீங்கள் வெளியில் சென்று போட்டியாளர்களிடம் சொல்லிவிட்டு மெயின் கேட்டுக்கு வாருங்கள் என்று பிக்பாஸ் சொல்கிறார்.
இதனால் ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இனி யாருக்காக பிக்பாஸ் பார்க்க வேண்டும் என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news