/tamil-ie/media/media_files/uploads/2022/09/priyanka.jpg)
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான பிரியங்கா தற்போது சோறில்லா வாழக்கையா என்பது பதிவிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவின் பேச்சை கேட்கவே ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர் என்று சொல்லாம். கலகலப்பான பேச்சு, பாடல் நடனம், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தனது தனி முத்திரையை பதிப்பதில் பிரியங்கா வல்லவர்.
ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நண்பர்கள் பலர் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவர்களுடன் வெளியூர் செல்வது அவுட்டிங் செல்வது என பிரியங்கா தனது சமூக வலைதளத்தை எப்போதும் பிஸியாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா தனது வழக்கமான தான் சொல்லும் ஹலோ மக்களே என்று தொடங்கும் இந்த பாடலில், ரீல்ஸ் போடுரோம் ஃபன் பண்றோம் என்று தொடங்குகிறார். இந்த பாடலில் பீட்சாவை காட்டாத ரவுடியே நான்தானே என்று பாடியுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சியின் ப்ரமோஷனுக்காக பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் சோறில்லா வாழக்கையா என்று அவர் பாடிய பாடலுக்கு நமக்கு சோறுதான் முக்கியம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.