Advertisment

சர்வைவர் பணம் இன்னும் வரவில்லை... சும்மா கிளப்பி விடாதீங்க... நடிகை விஜயலட்சுமி

Tamil Reality Show : ஒரு கட்டத்திற்கு மேல் என்னைப்பற்றி அதிக செடீவ் காமெண்ட் வர தொடங்கியது. சில போடடியாளர்கள் பணம் கொடுத்து இதை செய்ய வைத்தது தெரிய வந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்வைவர் பணம் இன்னும் வரவில்லை... சும்மா கிளப்பி விடாதீங்க... நடிகை விஜயலட்சுமி

Survivor Vijayalakshmi Update : வெளிநாடுகளில் பிரபலமான சர்வைவர் ரியாலிட்டி ஷோ இந்தஆண்டு முதல்முறையாக தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜூன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ஜான்சிபார் என்றும் டான்சானியாக தீவு ஒன்றில் நடத்தப்பட்டது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சயில், முதலில் காடர்கள் வேடர்கள் என்று பிரிக்கப்பட்டு சவால்களை எதிர்கொண்டனர்.

Advertisment

அதன்பிறகு இரு அணியினரும் ஒன்றாக சேர்ந்து பல சோதனைகளை எதிர்கொண்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி 90 நாட்களை எட்டி முடிவுக்கு வந்தது. இதில் ரியல் சர்வைர் என்ற பட்டம் பெற்ற நடிகை விஜயலட்சுமி ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த இறுதிச்சுற்று தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவியது.

சாம்பியனான விஜயலட்சுமிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து ஒரு சில நாட்களில் சர்வைவரில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் விஜயலட்சுமி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது புதுவீட்டில் குடியேறினார். இது தொடர்பாக புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு பலரும் வாழ்த்து்ககளை தெரிவித்த நிலையில் ஒரு சிலர் சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் வந்த ஒரு கோடி ரூபாய் பணத்தில் விஜயலட்சுமி புது வீடு வாங்கியுள்ளார். என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ள விஜயலட்சுமி, சர்வைவர் பணம் எனக்கு இன்னும் வந்து சேரவே இல்லை. அந்த காசில் இந்த வீடு வாங்கி இருக்கிறேன் என்று கிளப்பி விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் சர்வைவர் பணம் தன்னிடம் வந்து சேர சில நாட்கள் ஆகும் என்றும், நிகழ்ச்சி அமைப்பாளர்களின் விதிப்படி நிகழ்ச்சி முடிந்து 2 மாதங்களுக்கு பிறகுதான் பணம் கையில் கிடைக்கும். என்று கூறியுள்ளார். சர்வைவர் நிகழ்ச்சியின் போது எங்களுடன் அந்த தீவில் க்ருவில் இருந்து சிலர் தொடர்பில் இருந்தனர். எங்களது அவசர தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுடன் தொடர்பு கொள்வோம். ஆனால் நான் யாரிடமும பேவில்லை. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மணிக்கணக்கில் பேசினார்கள்

அதேபோல் நடுவில் என்னைப்பற்றி நெகடீவ் கமெண்ஸ் வந்துகொண்டிருந்தது. இதை சிலர் திட்டமிட்டே செய்தார்கள் என்று நாள் சொல்வேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னைப்பற்றி அதிக செடீவ் காமெண்ட் வர தொடங்கியது. சில போடடியாளர்கள் பணம் கொடுத்து இதை செய்ய வைத்தது தெரிய வந்தது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த போட்டியாளர்கள் யார் யார் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கியுள்ள நிலையில், விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூகவலைளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Zee Tamil Vijayalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment