/indian-express-tamil/media/media_files/yAHdKhQSkNdPbsIDdsFH.jpg)
வி.ஜே.அக்ஷையா
சன்டிவியின் ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து கவனம் ஈர்த்த நடிகை வி.ஜே.அக்ஷையா தற்போது அடுத்து ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான மல்லி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற முக்கிய சீரியல் ரோஜா. பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் வி.ஜே.அக்ஷையா. ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, பிரியங்கா ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நடித்து வந்த நிலையில், தற்போது நள தமந்தி சீரியலில் நடித்து வருகிறார்.
அதேபோல் ரோஜா சீரியலுக்கு பின் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்த சுப்பு சூரியன் சமீபத்தில் ஜீ தமிழின் ஒளிபரப்பாக தொடங்கிய வீரா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ரோஜா சீரியலுக்கு பின் எந்த சீரியலிலும் நடிக்காத விஜே.அக்ஷையா தற்போது மல்லி என்ற சீரியலில் இணைந்துள்ளார். இந்த சீரியல் சன்டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. குடும்பத்தில் நடக்கும் அன்பு பாசம் பகை உள்ளிட்ட நிகழ்வுகளை அடிபபடையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் க்ரித்திகா, நிகிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/31/EYhPDMkk2kFMURHiyQtI.png)
'செம்ம காலை' மற்றும் 'வணக்கம் தமிழ்' போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த வி.ஜே.அக்ஷையா, 'ரோஜா' ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த நிலையில், தற்போது தனது 2-வது சீரியலாக மல்லி சீரியலில் இணைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.