/indian-express-tamil/media/media_files/5CtpXNlEA2uI9LU6Qy9M.jpg)
மாரி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வரும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் மதிய வேளையில் வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து நல்ல ரேட்டிங்குகளை பெற்று வருகிறது,
அந்த வகையில் மாலையல் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த சீரியல் தான் சீதா ராமன். இந்த சீரியலுக்காக தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலின் இறுதிக்கட்ட எபிசோடுகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெகுவிரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படும் நிலையில், சீதா ராமன் சீரியல் முடிவுக்கு வருவதால் மற்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
அதேபோல் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 7.30 மணி வரை என ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.