அம்மா ஆன சின்னத்திரை நடிகை; குழந்தையுடன் கணவன் - மனைவி போட்டோ வைரல்!

அஷ்வத் - கண்மணி மனோகரன் இருவவரின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

அஷ்வத் - கண்மணி மனோகரன் இருவவரின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

author-image
WebDesk
New Update
Kanmani Manoharan

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகி, பின்னர் ஜீ தமிழில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரன், நிகழ்ச்சி தொகுப்பாளர் அஷ்வத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கண்மணி மனோகரன். தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஒரு கட்டத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

அடுத்து ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், கண்மணி திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 
சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வத், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வருகிறார்.

இவருக்கும் கண்மணி மனோகரனுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. தனிடையே கண்மணி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.  இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது அஷ்வத் – கண்மணி தம்பதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவில் ஜூன் 8-ந் தேதி (நேற்று) குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளனர். இந்த போட்டோவில் கையில் மருத்துவமனை டேக்குடன் கண்மணி குழந்தையை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த பதிவுக்கு சைத்ரா ரெட்டி, ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பிரபல சீரியல் நடிகைகளும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து்ளளனர். 

Kanmani Manoharan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: