வீட்டுக்கு வரும் கணேஷ்... பதற்றத்தில் பாக்யா : எழில் - அமிர்தா பிரிய போகிறார்களா?

வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi 2

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

செழியன் – மாலினி விவகாரம் தெரிந்து வீட்டில் உள்ள அனைவரும் வருத்தத்தில் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக அமிர்தாவின் கணவன் வந்து பாக்யாவுக்கு புதிய தொல்லையாக மாறியுள்ளார். மேலும் அவர் கொடுத்த கெடு முடிந்துவிட்டதால் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற பயத்துடன் பாக்யா, தனது வீட்டில் பூஜை அறை முன்பு நின்றுகொண்டு வேண்டிக்கொண்டு இருக்கிறார்.

கணெஷ் விஷயத்தில் நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று, வேண்டிக்கொள்ளும் பாக்யா, செழியனுக்காக காபி எடுத்துக்கொண்டு மேலே போகிறார். அங்கு செழியன் கோபியின் கைகளில் படுத்து தூக்கிக்கொண்டிருக்கிறார். பாக்யா காபியுடன் அவனை எழுப்ப, அவன் நைட் அழுதுட்டே இருந்தான். கொஞ்சம் தூங்கட்டும் என்று கோபி சொல்ல, தான் எடுத்து வந்த காபியை, கோபியிடம் கொடுத்துவிட்டு செல்கிறார் பாக்யா.

அந்த நேரத்தில் ராதிகாவும், 2 காபி எடுத்து வர, நான் செழியனுக்கு எடுத்து போன காபி, அவருக்கு கொடுத்துவிட்டேன் சாரி என்று சொல்ல, அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்களும் இன்னும் காபி சாப்பிட்டிருக்க மாட்டீங்க என்று தான் வைத்திருந்த ஒரு காபியை பாக்யாவிடம் ராதிகா கொடுக்க, அதை வாங்கி குடிக்கிறார். இதனிடையெ அமிர்தாவை பார்க்க போகும் சந்தோஷத்தில் கணேஷ் டிப்டாப்பாக கிளம்புகிறான்.

Advertisment
Advertisements

தனது அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, அவர்கள் பாக்யாவுக்கு போன் செய்து, இனிமேல் இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது. நீயே பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட, என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பாக்யா, உடனடியாக அமிர்தாவின் அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு அவரும் வருத்தத்துடன் பேசுகிறார். இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் பாக்யா.

அப்போது அமிர்தா மேலே இருந்து கீழே இறங்கி வர, அவளை பார்த்து கண்கலங்கும், பாக்யா, உடனடியாக எழிலையும் அழைத்து, நீங்கள் கோவிலுக்கு சென்றுவாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். இந்த பக்கம் கணேஷ் வேகமாக பாக்யா வீட்டுக்கு வருகின்றான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: