Advertisment

அசிங்கமாக திட்டுகிறார்கள்... அவமானமாக இருக்கிறது: பாக்கியலட்சுமி சீரியல் வில்லன் சதீஷ் திடீர் முடிவு?

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Gopi Sathees

பாக்கியலட்சுமி கோபி

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடரில் வில்லத்தனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சதீஷ் (கோபி) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதே சமயம் அவர் பாக்யா கேரக்டருக்கு செய்த துரோகம், அவரிடம் சென்று மீண்டும் மீண்டும் வம்பிழுப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி வருவதால், ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் தன்னை ரசிக்கும் ரசிகர்களை நடிகர் சதீஷ் எப்போதும் உயர்வாகவே பேசி வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் ஒருசில முறை அவர் வெளியிடும் வீடியோக்களில் சொல்லும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் தான் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலக உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நீங்கள் தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தான் சீரியலில் தொடர்ந்து நடிப்பதாக அறிவித்திருந்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், நடிகர் சதீஷ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியே மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த வீடியோவில், தான் இந்த கேரக்டரில் ரொம்ப நாட்கள் தொடர்வேனா என்று தெரியாது. நான் ட்ரை பண்றேன்... மறுபடியும் உங்க அன்புக்கு எல்லாம் ரொம்ப நன்றி.என்று பதிவிட்டுள்ளார். அதற்கு முன்பாக வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், நம்ம கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாதிச்சு அதை வீட்டுக்கு கொண்டுட்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கு. பல அவமானங்களை சந்திக்க வேண்டியது இருக்கு. நாம நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டர் இதுதான் என்று பலர் அசிங்கமாக திட்டுகின்றனர். அது என்னை போன்ற என் ஜாதிக்காரர்கள் பலர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஜாதிக்காரர்கள் என்று சொல்வது என்னை போன்ற நடிகர்களை தான். அவர்களுக்கு எல்லாம் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று யாரும் நினைத்து பார்ப்பதில்லை. அதனால் தான் நான் அடிக்கடி இன்ஸ்டாகிராம் விட்டு வெளியே போய் விடுகிறேன். கேரக்டர் வேறு, நிஜ குணம் வேறு என்பதை பலர் மறந்து போய் நாம் எப்படி நடிக்கிறோமோ அப்படித்தான் இருப்போம் என்று அசிங்கமாக திட்டுகிறார்கள். அது நம்முடைய நிஜ வாழ்க்கையில் மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தும் என்று பலர் நினைப்பதில்லை என்று  சதீஷ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment