கணேஷ் பிரச்சனைக்கு ராதிகா கொடுத்த ஐடியா... குடும்பத்தை அழ வைத்த நிலா பாப்பா

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Baakiya

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

எழில் அமிர்தா பிரச்சனை காரணமாக பாக்யா வீட்டில் உள்ள அனைவருமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில். இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்பது குறித்து யோசித்து வருகின்றனர். அதே சமயம் அமிர்தா இந்த வீட்டை விட்டு போக கூடாது என்று பாக்யா வீட்டில் உள்ள அனைவரும் விரும்புகின்றனர். என்னை விட்டு போய்டாதே அமிர்தா நீயும் நிலவும் தான் எனக்கு எல்லாமே என்று எழில் சொல்கிறான்.

எழிலின் வார்த்தையை கேட்ட அதிர்தா என்ன எழில் இப்படி சொல்றீங்க, நான் எப்படி உங்களை விட்டு விட்டு போவேன் என்று சொல்லிட்டு அழுகிறாள். மறுபக்கம், அமிர்தா பிரச்சனையை நினைத்து ஈஸ்வரி தூங்காமல் இருக்கிறார். அங்கு கோபி ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல, அப்போது அங்கு வரும் ராதிகா, மேலே ஒரு ரூமை ரெடி பண்ணிருக்கேன் இனிமே நாம அங்கதான் தங்க போகிறோம் என்று சொல்கிறாள்.

இதை கேட்க, ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என் மகன் என்னுடனே இருக்கட்டும். நீ வேணுனா அங்க போய் தூங்கு என்று சொல்ல, இல்லம்மா நான் வந்ததில் இருந்து அப்பா வெளியில் தரையில் படுத்திருக்கிறார். இதுக்கு நானே என்ன செய்வது என்று யோசித்தேன் என சொல்லி, ஈஸ்வரியை சமாதானப்படுத்தும் கோபி, ராதிகாவுடன் தனி அறைக்கு சென்று பேசுகிறார்.

Advertisment
Advertisements

இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியில் வரதுன்னே தெரியல ராதிகா. சும்மா பாத்துக்கலாம் என்று சொல்லிட்டேன் என கோபி சொல்ல, அமிர்தா எந்த அளவுக்கு எழிலை விரும்புகிறாள் என்பதை அவனுக்கு புரிய வைக்க வேண்டும். இல்லை என்றால், அவனை நாம் அமிர்தாவின் வாழ்க்கையை விட்டு போக வைக்க வேண்டும் என்று சொல்கிறாள் ராதிகா. இதை கேட்ட கோபி, தேங்ஸ் ராதிகா இப்போ எனக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்று சொல்கிறான்.

அடுத்து மறுநாள் பாக்யா அனைவருக்கும் காபி கொடுக்க, இனியா, எல்லாரும் இந்த வீட்டை விட்டு போறாங்க என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறாள். அப்போது நிலா பாப்பா வந்து அனைவருக்கும் குட்மார்னிங் சொல்கிறது. தாத்தா ராமமூர்த்தி மடியில் உட்கார, நிலா என் பேத்தி நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ராமமூர்த்தி சொல்ல, ஈஸ்வரி, பாக்யா, இனியா மூவரும் கண்கலங்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: