மீண்டும் செழியனுக்கு தொல்லை... மாலினி நடத்திய நாடகம் : அதிர்ச்சியில் பாக்யா, ஜெனி

மாலினி செழியனுக்கு தொல்லை கொடுக்க, அமிர்தாவை தேடி கணேஷ் பொருட்காட்சிகே வந்துவிட்டார்

மாலினி செழியனுக்கு தொல்லை கொடுக்க, அமிர்தாவை தேடி கணேஷ் பொருட்காட்சிகே வந்துவிட்டார்

author-image
WebDesk
New Update
baakiyalak

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், அமிர்தாவை தேடி பொருட்காட்சிக்கு வந்துவிட்ட கணேஷை பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்யா, கவுண்டரில் பில் கொடுத்துக்கொண்டிருந்த அமிர்தாவை உள்ளே போக சொல்லிவிட்டு, கணேஷை தனியாக அழைத்து சந்திக்கிறார். அப்போது கணேஷ் நீங்க உங்க வேலையை தான் பார்த்துட்டு இருக்கீங்க. அமிர்தாவை இன்னும் எத்தனை நாளைக்கு ஒளிச்சி வைப்பீங்க என்று கேட்கிறார்.

மேலும் நீங்களே இதற்கு எதாவது பண்ணுங்க இல்லனா நானே எதாவது பண்ண வேண்டி வரும் என்று மிரட்ட, நான் சீக்கிரமாக இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார் பாக்யா. அடுத்து ஜெனியின் அப்பாவுக்காக செழியன் காத்துக்கொண்டிருக்க அங்கே வரும் மாலினி செழியனை வம்பிழுக்கிறார். இதற்காக அவர் மாலினிடம் கத்திக்கொண்டிரக்கும்போது ஜெனியின் அப்பா பார்த்துவிடுகிறார்.

அப்போது, நீங்க தான் ஜெனியின் அப்பாவா? செழியனுக்கு ஜெனி வேணும், எனக்கு செழியன இல்லாம வாழ முடியாது. சரி நான் இங்கிருந்து கிளம்புறேன் நீ சீக்கிரமா பேசிட்டு வந்துவிடு என்று சொல்லிவிட்டு மாலினி சென்றுவிட, இதை நம்பிய ஜெனியின் அப்பா, கோபத்தில் செழியனை திட்டுகிறார். செழியன் அவரை சமாதானம் செய்ய நினைத்தாலும் என் நடிப்பு எல்லாம் போதும் என்பது போல் அவர் சென்றுவிடுகிறார்.

Advertisment
Advertisements

உடனடியாக வீட்டுக்கு வரும் செழியன் பாக்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்ல, நானும் ஜெனியும் இனி சேர வாய்ப்பே இல்லை என்று சொல்லி அழுகிறான். மேலும் என் குழந்தையை கூட என்னால் பார்க்க முடியாது என்று சொல்ல, நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும் என்று பாக்யா அவனுக்கு ஆறுதல் கூறுகிறார். இதனிடையே கோபமாக வீட்டுக்கு வரும் ஜெனியின் அப்பா செழியன் திருந்த மாட்டான். இப்போவுமு் அந்த பெண்னை கூப்பிட்டு பேசிட்டு இருக்கான்.

தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கான்.அவன் நமக்கு வேண்டவே வேண்டாம் தூக்கி போடு என்று சொல்ல, இதை கேட்டு ஜெனி அதிர்ச்சியாகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: