Advertisment

கோபிக்கு வில்லியாக தெரியும் பாக்யா... செழியன் - ஜெனிக்கு இடையே புது வில்லன்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

ஒரு வழியாக எழில் பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து கோபியின் பிரச்சனை தொடங்கியுள்ளது. பாக்யாவை பிரிந்ததில் இருந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் கோபி, தனது பிசினஸில் லாஸ் ஆகி, பணியாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டான். அதேபோல் க்ரிடீட் கார்டு பில் கட்டாததால், அவர்கள் வீட்டுக்கே வந்ததும், ராதிகாவுக்கு தெரிந்துவிட்டது.

இதனிடையே தற்போது பிசினஸ் லாஸ் ஆனதால், கோபி தனது கம்பெனியை இழுத்து மூடுவதாக கூறியுள்ளார். தனது பிள்ளைகள் பெயரில் தொடங்கிய கம்பெனி, இப்படி ஆகும் என்று நினைக்கவே இல்லை என்று தனது நண்பனிடம் புலம்பும் கோபியை கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு என்று, அவனது நண்பன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். கோபி சீக்கிரமாக வீட்டுக்கு வந்தது குறித்து ராதிகா கேள்வி கேட்கிறாள்.

அப்போது எனது ப்ரண்டோட புருஷனுக்கு வேலை போய்விட்டதாம், உங்க கம்பெனியில் எதாவது வேலை இருக்கிறதா என்று கேட்க, சும்மா நாள்ல கம்பனி பத்தி ஒன்னும் கேட்க மாட்டா. ஆனா இன்னைக்கு இப்படி கேட்கிறாளே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறான். மறுபக்கம், எழில், பாக்யா, ராமமூர்த்தி மூவரும் ரெஸ்டாரண்ட் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருகின்றனர். அக்ரிமெண்டும் சைன் ஆகிவிடுகிறது.

இதன்பிறகு மூவரும் வீட்டுக்கு வர, எழில் அனைவரையும் அழைத்து பாக்யா ரெஸ்டாரண்ட் குறித்து சொல்ல சொல்கிறான். பாக்யாவும் அட்வான்ஸ் கொடுத்தது, அக்ரிமெண்ட் குறித்து சொல்கிறாள். இதை கேட்டு அனைவரும் சந்தோஷப்பட, செழியன் அம்மாவுக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், நீதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று இனியா சொல்ல இதை கேட்டு கோபி இதே வார்த்தையை இனியா ஏற்கனவே தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்து ஷாக் ஆகிறான்.

இனிடையே செழியன் ஜெனிக்கு சாரி என்று அனுப்பிய பொக்கேவை அவளது அப்பா குப்பை தொட்டியில் வீசிவிட்டு, இந்த விஷயம் ஜெனிக்கு தெரிய வேண்டும் என்று சொல்லி விடுகிறார். அதன்பிறகு வெளியில் செல்லும் கோபி, நண்பன் சதீஷூடன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு புலம்புகிறான். நான் ஒன்னும் இல்லாம போனது கூட பரவாயில்லைடா. ஆனால் நாங்கள் பிரிந்த பிறகு பாக்யா ரெஸ்டாரண்ட் வைக்கிற அளவுக்கு வளர்ந்து இருப்பது உண்மையிலேயே பொறாமையாக இருக்கிறது என்று சொல்ல, சதீஷ் அவனை சமாதானப்படுத்துகிறான். ஆனால் கோபி மேற்கொண்டு குடித்துக்கொண்டே இருக்கிறான் அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment