/indian-express-tamil/media/media_files/2025/07/02/deepak-dinakar-2025-07-02-17-38-54.jpg)
நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, என் மகன் பிக்பாஸ் பார்த்துக்கொண்டு இருந்தாலும், படிப்பில் கவனம் செலுத்தி, நல்ல மார்க் பெற்றுள்ளார் என்று நடிகர் தீபக் தினகர் கூறியுள்ளார்.
1999-ம் ஆண்டு விஜய் டிவியின் ஜனனம் எக்ஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தீபக் தினகர். அதன்பிறகு, அக்னி சாட்சி, அண்ணி, கீதாஞ்சலி, மலர்கள், ரோஜா கூட்டம் என பல தொடர்களில் நடித்திருந்தாலும் தீபக்கு சற்று திருப்புமுனை கொடுத்த சீரியல் திருமதி செல்வம். இந்த சீரியலில் நாயகன் சஞ்சீவ் தான் என்றாலும், தீபக் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் தான் தீபக்கிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 6 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியலில், தமிழ் என்ற கேரக்டரில் தீபக் நடிக்க, அவருக்கு ஜோடியாக, ஸ்ருதிராஜ் நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு 2021-ம் ஆண்டு விஜய் டிவியின் தமிழிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகனாக நட்சத்திரா நாகேஷூடன் நடித்திருந்தார்.
சீரியல் மட்டுமல்லாமல், விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், தொகுப்பாரளாகவும் பங்கேற்றுள்ள தீபக் தினகர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் பங்கேற்று, 98 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ள தீபக் தினகர், கடைசியாக சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விநோதய சித்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்த தீபக் தினகர் பிக்பாஸ் வீ்ட்டில் இருந்தபோது, நடந்த சம்பவங்கள் குறித்து டெலி விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் நான் இருந்தபோது ஃபைனல் போவன் என்று பலரும் நினைத்தார்கள். அதுவே எனக்கு கிடைத்த வெற்றிதான். ஆனால் நான் இப்படி எலிமினேட் ஆவேன் என்று நினைக்கவில்லை. எனக்கே அது ஷாக்காகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு கொடுத்த செண்ட்ஆஃப் பெரிதாக இருந்தது.
கேப்டன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொன்னது உண்மையில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு நல்லபாடியாக அமைந்தது. நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தது என் மகளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனால் அவரும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 10-ம் வகுப்பில் பள்ளியில் 2-வது அதிக மார்க் இவர் தான். பிக்பாஸ் நடந்தபோது அதையும் பார்த்துவிட்டு பரிட்சையும் எழுதி இருக்கிறார். அதுதான் அவனிடம் எனக்கு பிடித்தது,
படிப்பை மிஸ் பண்ணாமல், 4-5 பாடத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். குறிப்பாக அனைத்து பாடத்திலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளார். பிக்பாஸ் பார்த்துவிட்டு பரிட்சையும் சரியாக எழுதி இருப்பது உண்மையில் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.