/indian-express-tamil/media/media_files/G4yt9V7MIMWoBofFxNa0.jpg)
ரஞ்சிதமே சீரியல் நடிகர்
சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அவர் விரைவில் குணமாகி வர அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறு அவரது மகள் கோரிக்கை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரில் நடித்து வந்தவர் நடிகர் யுவராஜ் நேத்ரன். கடந்த 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர், தீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரும் பிரபல சீரியல் நடிகையாவார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், மூத்தமகள், அபிநயா விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் மூலம் பிரபலமான இவர், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் அபிநயா தற்போது தனது அப்பா நேத்ரன் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன், மருத்துவமனையில் அனுமதித்தோம். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறிவிட்டனர்.
புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்தபோது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி மறுபடியும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நீங்கள் அனைவரும் பிரார்தர்தனை செய்தால் என் அப்பா குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன். எனவே என் அப்பாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் நடிகர் நேத்ரன், குணமாகி மீண்டும் நடிக்க வர வேண்டும், உங்க அப்பா விரைவில் மீண்டு வருவார் என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரஞ்சிதமே தொடரில் இருந்து நேத்ரன் விலகியபோது, அதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவரது உடல்நல பாதிப்பு காரணமாக விலகியது தற்போது தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.