/indian-express-tamil/media/media_files/iybxsXWmqCCzLR1KF60d.jpg)
மாரிமுத்து - வேல ராமமூர்த்தி
சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்று வந்த எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில்,இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வேல ராமமூர்த்தி இது குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர், தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் முதலில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எதிர்பாராத விதமாக மாரிமுத்து மரணமடைந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்கும் வீழ்ச்சி ஏற்பட்டது. மாரிமுத்துவுக்கு பதிலாக டெரர் வில்லனாக களமிறங்கிய நடிகர் வேல ராமமூர்த்தி, அவரது பாணியில் நடித்து வில்லத்தனத்தை செய்திருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் மாரிமுத்து இல்லாத வெற்றிடம் எதிர்நீச்சலில் தெரிகிறது என்று கூறி வந்தனர். மேலும் சமீப காலமாக கதையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக எதிர்நீச்சல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்த்து. மாரிமுத்துவை மிஸ் செய்த ரசிகர்கள் பலரும் சீரியல் முடிந்தால் போதும் என்று கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வநதனர். இதனிடையே இந்த சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் என்று நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சன்டிவி டி.ஆர்.பியில் உச்சத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இறுதிநாள் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும், அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த சீரியலில் ஏண்டா நடித்தோம் என்று அவமானமாகவே பார்க்கிறேன். இந்த சீரியலில் நடித்தது கடைசி வரை ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.