தோசை சுட்டு மன்னிப்பு கேட்கும் சீரியல் நடிகர்: யாருக்காக இந்த சாரி? வைரல் வீடியோ!

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் சாரி என்று தோசை சுடும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vishnukanth Sorry art

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த்

பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த சாரி என்று ஆங்கிலத்தில் எழுதி தோசை சுடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கடந்த 2018-ம் ஆண்டு ஜீ தமிழில் வெளியான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விஷ்ணுகாந்த். தொடர்ந்து என்றென்னும் புன்னகை, மற்றும் விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

தொடர்ந்து சின்னத்திரை நடிகை சம்யுக்தாவை திருமணம் செய்துகொண்ட விஷ்ணுகாந்த், ஒரு சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தற்போது தெலுங்கில் வெளியாகி வரும் குடிகண்டலு என்ற சீரியலில் நடித்து வரும் விஷ்ணுகாந்த், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் புகழ் பெற்றுள்ளார்.

இந்த குண்டிநிண்டா குடிகண்டலு சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஷ்ணுகாந்த் பிரபலமான சின்னத்திரை நடிகராக வலம் வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி கௌடா நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமான ரெமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது,

Advertisment
Advertisements

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணுகாந்த், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், தோசை சுடும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தோசையில் சாரி என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். சீரியலில் விஷ்ணுவுன் நடிப்பவர்களும் இதில் இருப்பதால், இது சீரியலில் வரும் காட்சிக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது.

சீரியலின் கதையை பொருத்தவரை அடிக்கடி கோபப்படும் தேஜஸ்வினியை சமாதானப்படுத்தும் வகையில், விஷ்ணுகாந்த் தோசையில் சாரி சொல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குண்டிநிண்டா குடிகண்டலு சீரியல் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: