/indian-express-tamil/media/media_files/7EoWOaR3qO5aheTt40Uu.jpg)
சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்ததால், சீரியல் நடிப்பில் இருந்து விலகிய ஆலியா மானசா, முதல் பிரசவத்திற்கு பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார்.
அதன்பிறகு 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், அடுத்து சன்டிவியின் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல் அவரது கணவர் சஞ்சீவ், சன்டிவியின் கயல் சீரியலில் எழில் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சைத்ரா ரெட்டி நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் தனது குடும்ப பிரச்சனைகளை தீர்க்க போராடும், கயல், தனது சொந்த வாழ்க்கையில் எழிலுடன் திருமணம் செய்துகொண்ட எபிசோடுகள் சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்த எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இதற்கு ஆலியா மானசா விளையாட்டாக ஒரு கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உங்கள் இருவருக்கும் மனமார்ந்த சீரியல் திருமண வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.