New Update
/indian-express-tamil/media/media_files/ovZkWo9UXf1EUrugYQoO.jpg)
நடிகை ஆர்த்தி சுபாஷ்
நடிகை ஆர்த்தி சுபாஷ்
சன்டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஆர்த்தி சுபாஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் சென்னையை ஆர்த்தி சுபாஷ், தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள பள்ளியில் முடித்து சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் டிராவல் & டூரிஸம் மேனேஜ்மென்ட்டில் கல்லூரிப் படிப்பை முடித்தார். தொடர்ந்து யூடியூப்பில் வெப் சீரிஸ்களில் நடித்த ஆர்த்தி சுபாஷ், சென்னை மீம்ஸ் என்ற யூடூப் சேனலில் சம்சாரம் அது மின்சாரமில் நடித்தார். அதன்பிறகு பாண்டிவர் இல்லம் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த குடும்ப சீரியல் பாண்டவர் இல்லம். கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில் மல்லிகா என்ற கேரக்டரில் நடித்தவர் ஆர்த்தி சுபாஷ். இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் நடித்து வந்த இந்த சீரியலில், மல்லிகா அழகு சுந்தரத்தை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொள்வார்.
இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆர்த்தி சுபாஷ், தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்தி சுபாஷ் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். பாண்டிவர் இல்லம் சீரியலில் ரேவதியாக நடித்து வந்த நடிகை கிருத்திகாவுடன் இணைந்து ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றது.
தற்போது பாண்டவர் இல்லம் சீரியல் முடிவடைந்த நிலையில், மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் ஆர்த்தி சுபாஷ், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில, தற்போது பாலி சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.