/indian-express-tamil/media/media_files/2024/11/09/eTuKYpVdk5ZqEG26zJ3T.jpg)
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் முக்கிய சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் தற்போது விஜய் டிவி சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல், மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறியுள்ளது. இதன் காரணமாக பழைய சீரயில்கள் முடிவுக்கு வருவதும், புதிய சீரயில்கள், என்ட்ரி ஆவதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
அதேபோல், மற்ற சேனல்களின் சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் அந்த சீரியல் முடிந்தவுடன் வேறொரு சேனலில் புதிய சீரியலில் நடிப்பதும் நடந்து வருகிறது. இந்த வகையில் விஜய் டிவியில் நடித்து வந்த பல நடிகைகள் தற்போது சன்டிவி சீரியலிகளில் நடித்து வரும் நிலையில், தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் விஜய் டிவி சீரியலில் எண்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தீபா என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஆர்த்திகாவுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகளில், தீபாவை கண்டுபிடிப்பதிலேயே திரைக்கதை நகர்ந்த நிலையில், நேற்றைய எபிசோட்டில், தீபா இறந்துவிடுவதுபோல் கட்டப்பட்டது. மேலும் சீரியல் இனி கிராமத்து கதையை நோக்கி செல்லும் என்றும் ப்ரமோ வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகிய ஆர்த்திகா தற்போது விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.