சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்த நடிகை ஆயிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த சீரியலிலும் நடிக்காத நிலையில், தற்போது அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையின் டாம்பாய் என்றதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் நடிகை ஆயிஷா. ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள இவர், அந்த சீரியலில் ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஒரு கட்டத்தில் சத்யா சீரியல் முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்து அந்த சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பானது. முதல் சீசன் போலவே 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த சீரியலில் தெறி படையப்பா உள்ளிட்ட பட காட்சிகளை சீரியலில் வைத்து மாஸ் அசத்தியவர் ஆயிஷா.
தமிழ் மட்டுமல்லாது மற்றமொழி சீரியலிகளிலும் பிஸியாக நடித்து வந்த ஆயிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 63 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்ட ஆயிஷா, தற்போது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். மேலும், சமீபத்தில் வெளியான வெப் தொடரான உப்பு புளி காரம் தொடரில் முக்கிய கேரக்டரில் ஆயிஷா நடித்துள்ளார்.
இதனிடையே சீரியல் மற்றும் வெப் தொடர் நடிகையாக இருந்த ஆயிஷா தற்போது தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஜீ தமிழில் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆயிஷா களமிறங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“