/indian-express-tamil/media/media_files/IosuKoLgXKR4uctv3Efn.jpg)
எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வநத நடிகை தற்போது ரீ-என்டரி கொடுத்துள்ளதால், சீரியல் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், இனி கதை எப்படி பயணிக்கு என்பது குறித்து ரசிகர்களின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர், தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக வருகிறார். இதில் கடந்த சில வாரங்களாக தர்ஷினி கடத்தல் தொடர்பான எபிசோடுகள் அரங்கேறி வந்த நிலையில், தற்போது அவரது திருமணம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் அண்ணன் குணசேகரனுக்கு ஆதரவாக இருந்த தம்பி கதிர், ஞானம் ஆகிய இருவரும் தற்போது அண்ணனுக்கு எதிராக திரும்பியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த சீரியலில் அப்பத்தா பட்டம்மாள் கேரக்டரில் நடித்து வந்த நடிகை பாம்பே ஞானம் மீண்டும் ரீஎன்டரி கொடுத்துள்ளார். அவர் ஷூட்டிங்கிற்கு வந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலின் தொடக்கத்தில், அவ்வளவாக பேசாத அப்பத்தா அடுத்தடுத்து எபிசோடுகளை கடக்கும்போது, அவர் பேசிய ஒவ்வொரு தருணமும் பரபரபபின் உச்சமாக சென்றது. அதன்பிறகு குணசேகரன் குடும்பத்து மருமகள்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய பட்டம்மாள், திடீரென ஹாஸ்பிட்டலுக்கு வரும்போது காரில் குண்டுவெடித்து இறந்துவிட்டதாக வீட்டாரிடம் சொல்லி வைத்திருந்தார் குணசேகரன். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா அப்பத்தா பட்டம்மாளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை திருமணம், கடத்தல் நாடகம், கோர்ட், ஜெயில் என சென்றுகொண்டிருந்த எதிர்நீச்சல் தற்போது மீண்டும் தனது பழைய கதைகளத்திற்கே திரும்பி சொத்து யாருக்கு போகும் என்ற அடிப்படையில் கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தம்பிகள் அண்ணனுக்கு எதிராக திரும்பிவிட்ட நிலையில், அப்பத்தாவும் அவர்களுடன் சேர்ந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.