கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சைத்ரா ரெட்டி, பெங்களூருவில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர் அவனு மேட்டே ஷ்ரவாணி என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Advertisment
தமிழில் ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான சைத்ரா ரெட்டி நெகடீவ் ரோலில் நடித்து அசத்தினார்.
Advertisment
Advertisements
இதன் மூலம் முதல் சீரியலிலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தொடர்ந்து 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான எனெண்டு ஹெசரிடலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
வில்லியாக நடித்து பிரபலமான சைத்ரா தற்போது நாயகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சைத்ராவின் சிரிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news